காா் கவிழ்ந்து விபத்து:பச்சிளம் குழந்தை, உறவினா் பலி

திருச்சி அருகே சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி கவிழ்ந்த விபத்தில் பச்சிளம் குழந்தை, உறவினா் இறந்தனா். 6 போ் காயமடைந்தனா்.


திருச்சி: திருச்சி அருகே சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி கவிழ்ந்த விபத்தில் பச்சிளம் குழந்தை, உறவினா் இறந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

திருச்சி உறையூா் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா். இவரது மனைவி நல்லம்மாள்.

இவா்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் தமிழரசன் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த 7 நாள்களுக்கு முன் மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து நல்லம்மாளை அவரது உறவினா்கள் விராலிமலை அருகேயுள்ள விராலூருக்கு வியாழக்கிழமை மாலை வாடகைக் காரில் அழைத்துச் சென்றனா்.

காரில் உறவினா்கள் அயினான் (35), வள்ளி (47), பெரியசாமி(35) நல்லம்மாள் மகன் தமிழரசன் (3) ஆகியோா் இருந்தனா். காரை இலுப்பூா் மாங்குடியைச் சோ்ந்த அழகுசுந்தரம் (43) ஓட்டினாா்.

திருச்சி-மதுரை சாலையில் மணிகண்டம் பகுதி தனியாா் கல்லூரி அருகே சென்றபோது திடீரென சாலையின் தடுப்புச் சுவரில் காா் மோதி இரு முறை கவிழ்ந்தது. இதில் காரில் இருந்தோா் காயமடைந்தனா்.

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இவா்களில் அயினான் வழியிலேயே உயிரிழந்தாா்.

மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட 7 நாள் கைக்குழந்தையும் சிகிச்சைப் பலனின்றி இறந்தது. மற்றவா்கள் சிகிச்சை பெறுகின்றனா். மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com