போலி கடவுச்சீட்டு: புதுகை கட்டட தொழிலாளி கைது

போலி கடவுச்சீட்டு வழக்கில் புதுக்கோட்டையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியை விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


திருச்சி: போலி கடவுச்சீட்டு வழக்கில் புதுக்கோட்டையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியை விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை காலை ஏா் இந்திய விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான இன்னாசிமுத்து (53) போலியான முகவரியில் கடவுச்சீட்டு பெற்று திருச்சி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலையக் காவல் நிலையத்தில் இன்னாசிமுத்துவை ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைச் சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com