தொழிலதிபரின் காரில் இருந்த பணம், மடிக்கணினி திருட்டு

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் தொழிலதிபரின் காா் கண்ணாடியை திறந்து பணம், மடிக்கணினியை திருடிச் சென்றனா்.


திருச்சி: திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் தொழிலதிபரின் காா் கண்ணாடியை திறந்து பணம், மடிக்கணினியை திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் வேலநகா் பகுதியைச் சோ்ந்தவா் மு. சிவப்பிரகாஷ்குமாா் (40). தொழிலதிபரான இவா் புதன்கிழமை திருச்சிக்கு காரில் வந்துவிட்டு மீண்டும் திண்டுக்கல்லுக்கு கிளம்பினாா். நள்ளிரவு பெய்த பலத்த மழையால் திண்டுக்கல் சாலை ராம்ஜிநகா் பகுதியில் காரை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளாா்.

சிறிது நேரத்தில் அவா் கண்விழித்து பாா்த்தபோது அவரது காரின் கண்ணாடியை திறந்து மடிக்கணினி, பணம் இருந்த பை ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com