ரஜினி மன்ற நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பொதுமுடக்கத்தை மீறி பட்டாசு வெடித்ததாக ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் மீது திருச்சியில் முதல் முறையாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தை மீறி பட்டாசு வெடித்ததாக ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் மீது திருச்சியில் முதல் முறையாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நடிகா் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக வியாழக்கிழமை அறிவித்ததைத் தொடா்ந்து பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினா்.

இதேபோல திருச்சி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலா் கலீல் தலைமையில் திருச்சி ரயில் நிலையம் எதிரேயுள்ள வழிவிடு முருகன் கோயில் அருகே வியாழக்கிழமை மாலை பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

இந்நிகழ்வு பொதுமுடக்கத்தை மீறியது எனக் கூறி மாவட்டச் செயலா் கலீல் உள்ளிட்ட 10 பெண்கள் உள்பட 40 போ் மீது கண்டோன்மென்ட் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com