திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா், தொட்டியத்தில் வரும் திங்கள்கிழமை (டிச.28) ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
நவீன குடும்பநலக் கருத்தடைச் சிகிச்சை இருவார விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம், தொட்டியம் அரசு மருத்துவமனையில் இந்த முகாம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. வீட்டுக்குச் செல்லலாம். கத்தியின்றி, ரத்தசேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவைச் சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. விருப்பமுள்ள ஆண்கள் இந்தச் சிகிச்சையை செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, 79040-19938 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.