திருச்சி
பூட்டியிருந்த மரப்பட்டறையில் தீ விபத்து
திருச்சியில் பூட்டியிருந்த மரப்பட்டறையில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சியில் பூட்டியிருந்த மரப்பட்டறையில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் பிரேம் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது. இந்த பட்டறையை வெள்ளிக்கிழமை இரவு பூட்டிவிட்டுச் சென்றனா். இரவு 10. 30 மணியளவில் பட்டறையில் இருந்து புகை வந்ததையடுத்து தீ பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினா் கண்டோண்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.
நிலைய அலுவலா் மெல்கிராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இதில், பட்டறையில் இருந்த மரப்பொருள்கள் தீயில் எரிந்து சேதமானது. பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.