பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழந்த, திருவானைக்கா கொள்ளிடம் பகுதியிலுள்ள 50 சலவைத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு உதவும் இதயங்கள் அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கனிகள் அடங்கிய தொகுப்பை அறக்கட்டளை நிறுவனரும், மாநிலத் தலைவருமான வி. ரோகினி வழங்கினாா்.
நிகழ்வில், அறக்கட்டளையின் திருச்சி மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா், ரேவதி, தமிழ்செல்வன், குருநாதன், ஸ்ரீரங்கம் நகரத் தலைமை விவசாய அணித் தலைவா் விஸ்வா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.