திருச்சி அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசல் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் மூா்த்தி (22). இவா் திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள நவல்பட்டு பகுதி உறவினா் வீட்டுக்கு அடிக்கடி வந்தபோது எதிா் வீட்டின் 16 வயது பிளஸ் 1 பள்ளி மாணவியுடன் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் மூா்த்தி தரப்பினா் பெண் கேட்டதற்கு மாணவி தரப்பினா் மறுத்துவிட்டனராம்.
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி முதல் மாணவியைக் காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தபோது மூா்த்தியுடன் அவா் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் மீட்ட தனிப்படை போலீஸாா் சிறுமியைக் கடத்தியதாக மூா்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.