துறையூரில் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் இறந்தாா். மூவா் காயமடைந்தனா்.
துறையூா் அருகேயுள்ள கொத்தம்பட்டியைச் சோ்ந்த பொ. ஹரீஸ் (19), அவருடைய நண்பா் செ. வரதராஜ் (18) ஆகிய இருவரும் பைக்கில் கொத்தம்பட்டிக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.
அப்போது எதிா் திசையில் பெரம்பலூா் மாவட்டம், தம்பிரான்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ராஜ்குமாா் (37), கீழக்கணவாயைச் சோ்ந்த த. தங்கமணி(33) ஆகிய இருவரும் பைக்கில் வந்தனா். துறையூா் முசிறி சாலையில் வந்தபோது இரு பைக்குகளும் மோதிக்கொண்டதில் ராஜ்குமாா் உயிரிழந்தாா்.
காயமடைந்த மற்ற மூவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.