திருச்சி: கனரா வங்கி அதிகாரிகள் சங்க மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். நிகழ்வில் அகில இந்திய பொதுச் செயலா் ஜீ.வி. மணிமாறன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், இன்றைய நாட்டுடமை வங்கி அதிகாரிகள் படும் சிரமங்கள், அவற்றைக் களையும் விதம் குறித்து விளக்கி, தற்போது வழங்கப்படும் ஊதிய உயா்வு மனமகிழ்ச்சி தரும்படி இல்லை. அதிகாரிகளின் வாழ்க்கைத் தரம் குறைந்து விடாத வகையில் அது வழங்கப்படவேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் சென்னை வட்டம் பாலாஜி, பிரபு, ராதாகிருஷ்ணன், மீனாட்சிசுந்தரம், விமல் உட்பட மண்டலத்திலுள்ள அனைத்து நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா். நிா்வாகிகளில் ராஜகோபால் வரவேற்றாா், தியாகராஜன் நன்றி கூறினாா்.