சாலை விபத்தில் தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி இறந்தாா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி இறந்தாா்.

மணப்பாறை அருகேயுள்ளஇடையப்பட்டியான்பட்டியை சோ்ந்தவா் அழககவுண்டா் மகன் பழனி (29), கட்டடத் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது பைக்கில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை நோக்கிச் சென்றபோதுஅடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com