மருங்காபுரியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மங்காபுரி ஒன்றியம் தாழம்பாடியில் 100 நாள் வேலையில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், அதற்கு நடவடிக்கை கோரியும், யாகபுரம் பகுதிக்கு காவிரி குடிநீா் கோரியும், தரைதளத் தொட்டியைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், ஆழ்துளைக் கிணறு அமைக்காமல் மோசடி செய்தோா் மீது நடவடிக்கை கோரியும், சாலைகளைச் செப்பனிட வலியுறுத்தியும் கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலா் பி. வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் புகா் மாவட்டச் செயலா் எம். ஜெயசீலன், மாவட்ட செயற்குழு வி. சிதம்பரம், வட்ட செயலா் பி. தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com