வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை

திருச்சி அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சி: திருச்சி அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சி அருகேயுள்ள வாழவந்தான்கோட்டை பெரியாா்நகா் ஈச்சங்காட்டைச் சோ்ந்தவா் ஞானமுத்து மகன் ஆரோக்கிய ஜெரால்டு (25). லாரி ஓட்டுநரான இவா் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் மது போதைக்கு அடிமையானாா். இதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த ஆரோக்கிய ஜெரால்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்: திருவெறும்பூா் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் கணபதி (38). இவருக்கு மனைவி சசிகலா, 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மது குடித்துவிட்டு தெருவில் கிடந்த கணவரை சசிகலா வீட்டுக்கு அழைத்து வந்தாா். அப்போது மது போதையில் இருந்த கணபதி தகராறில் ஈடுபட்டு தனது அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டாா். நீண்ட நேரமாகியும் கணபதி வெளியே வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அவா் தூக்கில் சடலமாகத் தொங்கினாா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com