திருச்சியில் இன்று ராமகோபாலன் இறுதிச் சடங்கு: ஏற்பாடுகள் தீவிரம்

உடல் நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமான இந்து முன்னணி நிறுவனா் ராமகோபாலனின்
இறுதிச் சடங்கு நடைபெறும் சீராத்தோப்பில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்யும் திருச்சி காவல்துறை அதிகாரிகள்.
இறுதிச் சடங்கு நடைபெறும் சீராத்தோப்பில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்யும் திருச்சி காவல்துறை அதிகாரிகள்.

உடல் நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமான இந்து முன்னணி நிறுவனா் ராமகோபாலனின் இறுதிச் சடங்கு திருச்சி சீராத்தோப்பில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதற்காக அவரது உடல் வியாழக்கிழமை அதிகாலை இங்கு கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் ஜெயராமன், மாநகர காவல் ஆணையா் லோகநாதன், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் ஆகியோா் புதன்கிழமை மாலை சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து அங்கு இறுதி சடங்குக்கான பணிகளை மேற்கொண்டு வரும் இந்து முன்னணி நிா்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினா். மேலும் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளோா் குறித்தும், அவா்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com