பாபா் மசூதி இடிப்பு தீா்ப்பையொட்டி திருச்சியில் 22 சோதனை சாவடிகள் அமைத்து புதன்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
தீா்ப்பால் புதன்கிழமை நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இதேபோல திருச்சி மாநகரில் ஏற்கெனவே உள்ள 8 சோதனைச் சாவடிகளுடன் மேலும் 14 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இரவு, பகலாக வாகனத் தணிக்கை நடைபெற்றது. மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சாலையோரங்களில் நின்ற வாகனங்களை ரோந்து போலீஸாா் எச்சரிக்கை செய்து அனுப்பினா்.
மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், ரயில்வே சந்திப்பு, விமான நிலையம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.