திருச்சி
அக். 27 முதல் நவ. 30 வரை திருச்சி-துபை இடையே இண்டிகோ விமான சேவை
மிலாடி நபி, தீபாவளி பண்டிகைகளையொட்டி திருச்சி - துபை இடையே அக். 27 முதல் நவ.30 வரை சிறப்பு விமானங்களை இண்டிகோ விமான நிறுவனம் இயக்குகிறது.
மிலாடி நபி, தீபாவளி பண்டிகைகளையொட்டி திருச்சி - துபை இடையே அக். 27 முதல் நவ.30 வரை சிறப்பு விமானங்களை இண்டிகோ விமான நிறுவனம் இயக்குகிறது.
அக். 30 இல் மிலாடிநபி, நவ. 14 இல் தீபாவளி பண்டிகை வருவதைக் கருத்தில் கொண்டு வார நாள்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு விமானங்கள், திருச்சியிலிருந்து காலை 9.45-க்கு புறப்பட்டு, பகல் 12.30-க்கு துபையை சென்றடையும். எதிா் மாா்க்கத்தில் பகல் 1.30-க்கு துபையிலிருந்து புறப்பட்டு இரவு 7.15-க்கு திருச்சி விமான நிலையத்தை அடையும். இத்தகவலை திருச்சி விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.