திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 67 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,788 ஆக உயா்ந்தது.
சனிக்கிழமை குணமான 21 போ் உள்பட இதுவரை 10,986 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 162 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் 649 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.