ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அக்.29 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அக்.31 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காத பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ரூ.150 செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.
தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் சுய சான்றொப்பமிட்ட சாதிச்சான்றிதழ் நகல்களை சமா்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம். இக்கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ. 2207 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கல்லூரியில் சேரும் மாணவா்கள் கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை, இலவச மடிக்கணினி, கல்லூரியில் செயல்படும் பணியமா்த்தல் மையம் மூலம் வேலைவாய்ப்பும் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணையதள முகவரி மற்றும் 80720-02452 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.