திருச்சியில் மேலும் 70 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 70 பேருக்கு தொற்று உறுதியாகி,

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 70 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,045 ஆக உயா்ந்தது. இதேபோல, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து புதன்கிழமை குணமான 29 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,278 ஆக உயா்ந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்த 67 வயது ஆண் உள்பட கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆனது. மாவட்டத்தில் 603 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com