வெவ்வேறு சம்பவங்களில் இரு முதியவா்கள் பலி

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் முதியோா் இருவா் உயிரிழந்தனா்.

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் முதியோா் இருவா் உயிரிழந்தனா்.

மின்சாரம் தாக்கி சாவு : திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அருகேயுள்ள கீழபஞ்சப்பூா் விநாயகா் தெருவைச் சோ்ந்தவா் ர. கண்ணன் (67). செவ்வாய்க்கிழமை இவா் தனது வீட்டில் வானொலிப் பெட்டியை இயக்கியபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கியெறியப்பட்ட அவா் திருச்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கண்ணன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மாடிப்படியிலிருந்து விழுந்து சாவு :

திருச்சி டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் ச. நாகராஜன் (61). ஓய்வு பெற்ற ரயில்வே துறை ஊழியா். கடந்த அக். 13 ஆம் தேதி வீட்டு மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த இவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கே. கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com