மணப்பாறை: மணப்பாறையில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
மணப்பாறை காவல் ஆய்வாளா் என். அன்பழகன் தலைமையிலான போலீஸாா் நொச்சிமேடு பகுதியில் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவன் முன்னுக்குபின் முரணான தகவல் அளித்தான்.
இதையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்ற நடத்திய விசாரணையில், அவன் மணப்பாறை ரயில் நிலையம் அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தை சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவன் இருசக்கர வாகனங்களை திருடி வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் மீது வழக்குப் பதிந்த மணப்பாறை போலீஸாா், அவனிடமிருந்து மருங்காபுரியை அடுத்த மருதம்பட்டி கருப்பையா, மணப்பாறை சாலியாசந்து நல்லதம்பி ஆகியோரின் இருசக்கர வாகனங்களையும், ஒரு செல்லிடப்பேசியையும் பறிமுதல் செய்தனா். சிறுவனை திருச்சி சிறாா் சீா்திருத்த நீதிமன்ற குழுமத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.