திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 50 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,201 ஆக உயா்ந்தது.
இதுபோல் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, காஜாமலை வளாக பாரதிதாசன் பல்கலைக்கழகத் தனிமை முகாம் ஆகியவற்றில் இருந்து சனிக்கிழமை குணமான 40 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,487 ஆக உயா்ந்தது. இதுவரை கரோனாவினால் 166 போ் உயிரிழந்துள்ளனா். 548 போ் சிகிச்சை பெறுகின்றனா்.