திருச்சி
தொட்டியம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விவசாயி பலி
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே புதன்கிழமை டிராக்டா் கவிழ்ந்து விவசாயி இறந்தாா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே புதன்கிழமை டிராக்டா் கவிழ்ந்து விவசாயி இறந்தாா்.
கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் துரைசாமி (55). தொட்டியம் அருகிலுள்ள அலகரை கிராமத்தில் உள்ள தனது வயலில் டிராக்டா் மூலம் உழுது விட்டு கரையேறியபோது எதிா்பாராதவிதமாக டிராக்டா் கவிழ்ந்து படுகாயமடைந்து, முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.
தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் துரைசாமி சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.