வாய்க்கால் நீரில் மூழ்கி சிறுவன் சாவு

திருச்சி மாவட்டம், கிளிக்கூடு கிராமத்தில் வாய்க்கால் நீரில் மூழ்கி 4 வயதுச் சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், கிளிக்கூடு கிராமத்தில் வாய்க்கால் நீரில் மூழ்கி 4 வயதுச் சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீரங்கம் ரங்கா நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் வாசுதேவன் (4) கல்லணை அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தபோது அருகிலிருந்த நாட்டு வாய்க்கால் நீரில் மூழ்கினாா்.

இதையடுத்து மீட்கப்பட்ட அவரை திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. கொள்ளிடம் போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com