திருச்சியில் தொழிலதிபா் குடும்ப சிறுவன் கடத்தல் சம்பவத்தில் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கண்டோன்மென்ட் வாா்னா்ஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பிரபல தொழிலதிபா் சுப்ரமணியனின் பேரன் முத்தையா (12). புதன்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த இவா் மா்ம நபா்களால் காரில் கடத்தப்பட்ட நிலையில், மாநகர போலீஸாரின் நடவடிக்கையால் அன்று இரவே மீட்கப்பட்டாா். மா்ம நபா்கள் தப்பிய நிலையில், கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் மீட்கப்பட்டது. பின்னா் நீதிமன்றத்தில் சிறுவனை ஆஜா்படுத்திய போலீஸாா் பெற்றோரிடம் அவரை ஒப்படைத்தனா்.
இதுதொடா்பாக மாநகர போலீஸாா் விசாரணை நடத்தியதில் கண்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த மாணிக்கப்பாண்டியன், சரவணன், திருப்பதி, சதீஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். தலைமறைவான பிரகாஷ், செல்வக்குமாா் உள்ளிட்டோரைத் தேடுகின்றனா்.