திருச்சி அருகே மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோா் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
திருச்சி மாவட்டம், திருவளா்ச்சிபட்டி செல்லமுத்துபுரத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் ரகுபதி (28). இவருக்கும் குளத்தூா் தாலுகா மேலூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகள் சத்யாவுக்கும் (24) இடையே கடந்த 2 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் நடந்து, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சத்யா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த நவல்பட்டு போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதற்கிடையே தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகநவல்பட்டு காவல் நிலையத்தில் கணேசன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். சத்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டு மட்டுமே ஆவதால் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரும் விசாரணை நடத்தி வருகிறாா்.