திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கண்ணுடையான்பட்டி அம்பேத்காா் தெருவில் வசிக்கும் க. பாலாஜி என்பவரின் வீட்டில் வியாழக்கிழமை மண்ணுளி பாம்பு இருப்பதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் வீரா்கள், உரிய கருவிகள் மூலம் 2 அடி நீளமும், 3 கிலோ எடையும் கொண்ட அந்த மண்ணுளி பாம்பை பிடித்து மணப்பாறை வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.