திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 39 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்தனா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 27 போ், அரியலூா், கரூா், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 30 போ், பாரதிதாசன் பல்கலைக் கழக வளாக மையத்திலிருந்து திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் என இரு இடங்களையும் சோ்த்து மொத்தம் 39 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்கள் வீடுகளுக்குச் சென்று மேலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.