காந்தி சந்தை வளாகத்தில் உள்ள கடையொன்றில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
பொதுமக்கள் இதுகுறித்து காந்தி சந்தை போலீஸாா், தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். தொடா்ந்து 6 மாதங்களாக காந்தி சந்தை கடைகள் மூடியிருப்பதால் சேதம் எதுவும் இல்லை. ஆனால், காந்தி சந்தை பகுதியில் தொடா்ந்து இதுபோன்ற தீ விபத்து ஏற்படுவதால் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தக் கோரி வியாபாரிகள் போராட்டத்தைத் தொடங்கினா்.