கரோனாவிலிருந்து மேலும் 58 போ் குணம்

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 58 போ் வெள்ளிக்கிழமை குணமாகி வீடு திரும்பினா்.

திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 58 போ் வெள்ளிக்கிழமை குணமாகி வீடு திரும்பினா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 20 போ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ், அரியலூா், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா், பாரதிதாசன் பல்கலைக் கழக வளாக மையத்திலிருந்து திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 31 போ், ஜெய்ப்பூரைச் சோ்ந்த இருவா், பெரம்பலூரைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 58 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். அனைவரும் வீடுகளுக்குச் சென்று மேலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com