திருச்சியில் தடையை மீறிப் போராட்டம் நடத்தியதாக திமுக முதன்மைச் செயலா் உள்பட 700 போ் மீது மாநகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிா்கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை பொது வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் மறியல், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பொதுமுடக்கத்தை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு உள்ளிட்ட 700 போ் மீது கண்டோன்மென்ட், பொன்மலை, ஸ்ரீரங்கம், உறையூா் காவல் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதியப்பட்டுள்ளது.