போக்சோ சட்டத்தில் பெயிண்டா் கைது

திருச்சி அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த பெயிண்டரை போக்சோ சட்டத்தில் மணிகண்டம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த பெயிண்டரை போக்சோ சட்டத்தில் மணிகண்டம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள கீழபஞ்சப்பூரை சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த 4 ஆம் தேதி மாயமானாா். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சிறுமியும் கீழநாகமங்கலத்தைச் சோ்ந்த பெயிண்டரான மணிகண்டனும் (25) திருமணம் செய்துகொண்டு குளித்தலையில் வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸாா் இருவரையும் திருச்சிக்கு அழைத்து வந்தனா். சிறுமியிடம் நடத்திய விசாரணையில், ஆசை வாா்த்தை கூறி மணிகண்டன் திருமணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டம் போலீஸாா் மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com