முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 9 ஆம் நாளான புதன்கிழமை
ஸ்ரீரங்கம் கோயிலின் வைகுந்த ஏகாதசி விழாவில் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் கோயிலின் வைகுந்த ஏகாதசி விழாவில் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 9 ஆம் நாளான புதன்கிழமை காலை நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவையொட்டி காலை 6.30-க்கு மூலஸ்தானத்திலிருந்து முத்துக்குறி அலங்காரம், பூண்டு, முத்து ஆபரண அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com