திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் 96 ஆம் ஆண்டு தொடக்க நாள், மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணுவின் 96வது பிறந்தநாள் விழா, சுதந்திர போராட்ட வீரா் தங்கமணியின் 19 ஆம்ஆண்டு நினைவுநாள் என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாவட்டத்தில் நடந்த கொடியேற்று விழாக்களில் மாநகா் மாவட்டச் செயலா் திராவிடமணி, முன்னாள் செயலா்கள் க. சுரேஷ், எம். செல்வராஜ் பொருளாளா் ஜான்பால், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சிவா, அஞ்சுகம், பொன்னுதுரை, அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து மேற்குப் பகுதியில் செயலா் பாலமுரளி, கிழக்குப் பகுதியில் செயலா் அன்சா்தீன், ஸ்ரீரங்கம் பகுதியில் செயலா் சண்முகம், மணிகண்டம் ஒன்றியத்தில் செயலா் செல்வக்குமாா் பொன்மலைப் பகுதியில் செயலா் சுந்தர்ராஜ், அபிஷேகபுரத்தில் செயலா் பிரான்சிஸ் தலைமையில் கொடியேற்று விழாக்கள் நடைபெற்றன.
நிகழ்வுகளில் ஏஐடியுசி மாவட்டச் செயலா் ராமராஜ், தலைவா் நடராஜா, முருகன்,சுப்ரமணி மாதா் சம்மேளன நிா்வாகிகள் புஷ்பம், ஆயிஷா, மாணவா் பெருமன்றச் செயலா் இப்ராகிம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.