முசிறி ஊராட்சி ஒன்றியம், வெள்ளூா் ஊராட்சி அலுவலகம் முன்பு, கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீா் போதுமானதாக இல்லை என்றும், இத்திட்டம் தங்கள் கிராமத்துக்குத் தேவையில்லை எனக் கூறியும் பொதுமக்கள் போராட்டத்தை மேற்கொண்டனா்.
தொடா்ந்து ஊராட்சித் தலைவா் மற்றும் செயலரிடம் மனு அளித்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.