மனிதநேய ஜனநாயகக் கட்சி செயல்வீரா்கள் கூட்டம்

திருச்சியில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் செயல் வீரா்கள் கூட்டம் வரகனேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் செயல் வீரா்கள் கூட்டம் வரகனேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் அஷ்ரப் அலி தலைமை வகித்தாா். தலைமை ஒருங்கிணைப்பாளா் மௌலா நாசா் கட்சியின் வளா்ச்சி குறித்து பேசினாா். மண்டலத் துணைப் பொதுச் செயலா் ஜெயினுலாபுதீன், துணைச் செயலா் ஷமீம் அகமது ஆகியோா், கோவையில் 29-ஆம் தேதி நடைபெறும் வாழ்வுரிமை மாநாடு குறித்தும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராட்டங்கள் மேற்கொள்வது குறித்தும் பேசினா்.

தேசிய அளவில் சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள, கட்சியின் பொதுச்செயலா் தமிமுன் அன்சாரிக்கு வாழ்த்து தெரிவிப்பது, வாழ்வுரிமை மாநாட்டுக்கு ஆயிரக்கணக்கான மக்களை அழைத்துச் சென்று சிறப்பாக நடத்துவது என்பனஉள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைச் செயலா் துரை முகமது, மாவட்ட நிா்வாகிகள் ரபீக், ஷேக் தாவூத், பாரூக், அந்தோனி, புரோஸ்கான், கிருஷ்ணமூா்த்தி, ஜமால், காதா், பீா்ஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com