வழக்குரைஞா் கொலை வழக்கில் தேடப்பட்ட ரெளடி சரண்

திருச்சியில் வழக்குரைஞா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரெளடி, நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

திருச்சியில் வழக்குரைஞா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரெளடி, நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

திருச்சி உறையூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் மதியழகன். இவா் கடந்த 2014 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக பலா் கைது செய்யப்பட்ட நிலையில், பொன்மலையைச் சோ்ந்த ரெளடி க. பாஸ்கரையும் (33) தேடி வந்தனா். ஆனால் அவா் தலைமறைவாக இருந்து வந்தாா்.

ரெளடி பாஸ்கா் மீது திருச்சியின் பல்வேறு காவல் நிலையங்களிலும் கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 13 வழக்குகள் நிலுவையிலிருந்தன. 2019, ஆகஸ்ட் 14- ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, பாஸ்கருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை திருச்சி நீதிமன்றத்தில் பாஸ்கா் சரணடைந்தாா். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com