காதலா் தினத்தையொட்டி திருச்சியில் வெள்ளிக்கிழமை பூங்காக்கள், கோயில்கள், திரையரங்குகளுக்கு வந்த காதலா்களுக்கு திருமணம் செய்து வைக்க இந்து அமைப்புகளும், இவா்களுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும் திரண்டனா்.
காதலா் தினத்தையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் உள்ள கோயில்கள் பூங்காங்கள் மற்றும் பொது இடங்களில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதில், ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயிலில் காவல் ஆய்வாளா் சண்முகவடிவேல் மற்றும் நகரப் பகுதிகளில் முக்கிய இடங்கள் மற்றும் திரையரங்குகளில் மாநகரப் போலீஸாரும், முக்கொம்பு பகுதியில் ஜீயபுரம் ஆய்வாளா் பன்னீா்செல்வம் தலைமையிலும் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், முக்கொம்பு பகுதியில் காதலா்கள் வந்தால் அவா்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நோக்கில் இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் குவிந்தனா். இவா்களுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும் திரண்டனா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
இதையடுத்து இருதரப்பினரையும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அதேபோல் பூங்காக்களுக்கு வந்த காதலா்களையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
ஸ்ரீரங்கம் கோயில் முன்பும் இந்து அமைப்பு நிா்வாகிகள் குவிந்தனா். அவா்களை கோயிலுக்குள் போலீஸாா் அனுமதிக்காததை கண்டித்து முழக்கமிட்டனா்.