பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு
மணப்பாறை நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதார நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டிய அவசியம், வீட்டுத் தோட்டம், மழைநீா் சேகரிப்பு, டெங்கு ஒழிப்பு, தூய்மை இந்தியா திட்டம், தனி நபா் கழிவறை, முறையான வரி செலுத்துதல், நெகிழி ஒழிப்பு ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கிராமிய கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பேருந்து நிலையம், விடத்திலாம்பட்டி, செவலூா், பொத்தமேட்டுப்பட்டி, தீராம்பட்டி, கல்லாத்துப்பட்டி, சிதம்பரத்தான்பட்டி, மஞ்சம்பட்டி, கோவில்பட்டி சாலை ஆகிய பகுதிகளில் வீதி நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நகராட்சி ஆணையா்(பொ) ஐ.சுப்பிரமணி உத்தரவின்பேரில் சுகாதார அலுவலா் நெடுமாறன், துப்புரவு ஆய்வாளா் முரளி, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் டைசன் உள்ளிட்டோா் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.