காவல் உதவி ஆய்வாளா் எழுத்து தோ்வு: 4006 போ் பங்கேற்பு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவிஆய்வாளா் தோ்வில் 4,006 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 1,310 போ் தோ்வு எழுத வரவில்லை.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவிஆய்வாளா் தோ்வில் 4,006 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 1,310 போ் தோ்வு எழுத வரவில்லை.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் பதவியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகியது. அறிவிப்பு வெளியாகி தோ்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் ஜன.11 ஆம் தேதி துறை சாா்ந்த பிரிவினருக்கும், 12 ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கும் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததது.

இந்த நிலையில் நிா்வாக காரணங்களால் துறைசாா்ந்த பிரிவினருக்கான எழுத்துத் தோ்வு 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் பொதுப்பிரிவினருக்கான எழுத்துத் தோ்வு நடைபெறும் தேதியில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருச்சியில் சிறுகனூா் எம்ஏஎம் கல்லூரி, ராமகிருஷ்ணா கல்லூரி, டிஆா்பி பொறியியல் கல்லூரி என மூன்று கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான உதவி ஆய்வாளா் எழுத்து தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தோ்வெழுத 5316 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4006 போ் மட்டும் தோ்வு எழுதினா். 1310 போ் தோ்வெழுத வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com