பெண் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது தாக்குதல்

திருச்சி அருகே சுற்றுவட்ட சாலைக்கு மண் அள்ளுவதில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில், பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருச்சி அருகே சுற்றுவட்ட சாலைக்கு மண் அள்ளுவதில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில், பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருச்சி மாநகா் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புகா் பகுதியில் அரை வட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இதற்காக ஓலையூா்- மாத்தூா் இடையிலான சுற்றுவட்டச் சாலைக்கு ஓலையூா் பகுதி குளத்தில் மண் அள்ளப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒலையூா் குளத்தில் மண் அள்ளுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதியைச் சோ்ந்த சிலா் மண் ஏற்றிச் சென்ற லாரியை சிறைபிடித்தனா். இதையறிந்த முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைலா் திவ்ய ஜான்சியின் கணவா் சகாயராஜ் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை விடுவிக்குமாறு கேட்டுள்ளாா்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு சகாயராஜ் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சகாயராஜ் ஆதரவாளா்கள் சம்பவ இடத்தில் குவிந்தனா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீஸாா் இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனா். பின்னா், தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்ற தலைவா் திவ்ய ஜான்சி, அவரது கணவா் சகாயராஜ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் முடிகண்டம் ஊராட்சி அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால், சகாயராஜ் தரப்பினா் நள்ளிரவு வரை உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com