திருவள்ளுவா் தினம் : இறைச்சிக் கூடங்கள் நாளை இயங்காது

திருவள்ளுவா் தினத்தையொட்டி, மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.16) இறைச்சிக்கூடங்கள் இயங்காது என மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளுவா் தினத்தையொட்டி, மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.16) இறைச்சிக்கூடங்கள் இயங்காது என மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுவா் தினம் ஜனவரி 16- ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி திருச்சி மாநகரில் இறைச்சிக் கூடங்கள் ( ஆடு, மாடு வதைக்கூடங்கள்), இறைச்சிக் கடைகள் ஆகியவை செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி கடைகளை நடத்துவோா் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவா் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com