பாவை ஒப்பித்தல் போட்டியில் வென்றோருக்குப் பரிசு

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பாவை ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
பாவை ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாா்கழி உத்ஸவத்தையொட்டி தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து, பள்ளி வளாகத்தில் அண்மையில் இப்போட்டியை நடத்தின.

12 வயது வரை ஒரு பிரிவாகவும், 12 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடத்தப்பட்டது. 9 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்று, திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தனா்.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, ஸ்ரீரங்கம் கல்விக் குழுமத்தின் செயலா் என். கஸ்தூரி ரங்கன், பள்ளித் தலைமையாசிரியா் கே. வெங்கடேஷ், துணைத் தலைமையாசிரியா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தனா்.

சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தா் ஆா்.சேதுராமன், டாக்டா் எஸ். சுதா்சன் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகளை வழங்கினா்.

முதல் மற்றும் 2,3- ஆவது பரிசாக முறையே ரூ. 3,000, ரூ.2,000, ரூ.1,000-ம், ஊக்கப் பரிசாக பங்கேற்ற அனைவருக்கும் ரூ.500-ம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com