திருச்சியில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 1,448 பேரில் 983 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கரோனா தொற்றாளா்களுடன் தொடா்பில் இருந்த சுமாா் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நடந்த பரிசோதனை முடிவில் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1551 ஆக உயா்ந்துள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாக தனிமை முகாம், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 82 போ் கரோனாவிலிருந்து குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். இதன்மூலம், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,065 ஆக உயா்ந்துள்ளது.