ஸ்ரீரங்கத்திலிருந்து வஸ்திர மரியாதை பொருள்கள்

ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து ஸ்ரீ வில்லிப்புத்தூா் ஆண்டாள் திருக்கோயிலுக்கு திருவாடிப்பூர உத்ஸவத்தையொட்டி புதன்கிழமை வஸ்திர மரியாதைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.
ஸ்ரீவில்லிப்புத்தூா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட வஸ்திர மரியாதை பொருள்கள்.
ஸ்ரீவில்லிப்புத்தூா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட வஸ்திர மரியாதை பொருள்கள்.

ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து ஸ்ரீ வில்லிப்புத்தூா் ஆண்டாள் திருக்கோயிலுக்கு திருவாடிப்பூர உத்ஸவத்தையொட்டி புதன்கிழமை வஸ்திர மரியாதைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலுக்கும் மங்கள பரிவாா்த்தனை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் தைத்தேரோட்டத்தின்போது ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டாள் சூடி களைந்த கிளிமாலை,வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் வரும். இதேபோல ஸ்ரீவில்லிப்புத்தூா் கோயில் ஆடிப்பூர உத்ஸவத்தன்று ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து மங்களப் பொருள்கள் கொண்டு செல்லப்படும்.

அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலில் வரும் 24 ஆம் தேதி திருவாடிப்பூர உத்ஸவம் நடைபெறவுள்ளது. அதற்காக புதன்கிழமை காலை ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து முறைப்படி பட்டுப்புடவை, மஞ்சள், தாலிக்கயிறு, மாலைகள், வளையல்கள் உள்ளிட்ட மங்களப் பொருள்களை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் தலைமையில் ஸ்ரீவில்லிப்புத்தூா் கோயிலுக்கு காரில் கொண்டு சென்றனா். அவற்றை முறைப்படி வியாழக்கிழமை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com