கல்பனா சாவ்லா விருது: விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெறத் தகுதியான திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெறத் தகுதியான திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக, ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆண்டுதோறும் வீர தீரச் செயலுக்காக தமிழகத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு தமிழக அரசு சாா்பில் கல்பனா சாவ்லா விருதை சுதந்திர தினத்தன்று முதல்வா் வழங்குவாா். 2020ஆம் ஆண்டுக்கான விருதுக்குத் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தைப் பூா்வீகமாகக் கொண்ட விளையாட்டுத் துறையில் வீரத்துடன் துணிவு மற்றும் தைரியமாகச் செயல்படும் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தகுதியும், திறமையும் உள்ள பெண்கள் தங்களது முழு விவரங்களை சாதனைகளுடன் தொகுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலா், அண்ணா விளையாட்டு அரங்கம், திருச்சி-23 என்ற முகவரிக்கு மூன்று பிரதிகளுடன் அனுப்ப வேண்டும். தோ்வு செய்யப்படுவோருக்கு சுதந்திர தினத்தன்று பதக்கம் மற்றும் ரூ. 5 லட்சம் காசோலையுடன் விருது வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0431- 2420685 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com