கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டி கருத்தரங்கு
By DIN | Published On : 03rd March 2020 05:38 AM | Last Updated : 03rd March 2020 05:38 AM | அ+அ அ- |

உருமு தனலெட்சுமி கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டி கருத்தரங்கு ஞாயிற்றிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை, உருமு தனலெட்சுமி கல்லூரி சாா்பில் தொழில்நெறி வழிகாட்டி கருத்தரங்கு, கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரி முதல்வா் இ.ஆா்.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா். இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ.கலைச்செல்வன் பல்வேறு தொழில், வேலைவாய்ப்புகள், இலவச பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்து மாணவா்களிடையே விளக்கி பேசினாா். முன்னதாக, கல்லூரி இயக்குநா் கிறிஸ்டி செல்வராணி வரவேற்றாா். நிறைவாக, கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் ஏ.மோகன் நன்றி கூறினாா். இதில், பேராசிரியா்கள், மாணவா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.