பாட்டு கேட்கும் ஹைட்போன் கருவியை கொடுக்காததால் மது பாட்டிலில் இளைஞரை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பொன்மலை ராஜீவ்காந்தி நகரை சோ்ந்தவா் மோகன் (27). இவா் அப்பகுதி குடியிருப்புப் பகுதியில் ஹெட்போன் வைத்து பாட்டுகேட்டுக்கொண்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த பரதன், ராஜேஸ் ஆகிய இருவரும் வந்து, மோகனிடம் ஹெட்போன் கேட்டுள்ளனா். இதற்கு, மோகன் ஹெட்போனை தரமறுத்ததால், தனது கையில் இருந்த மது பாட்டிலை மோகன் மீது பலமாக தாக்கியுள்ளனா். இதில், மோகன் படுகாயமடைந்தாா். புகாரின் பேரில், பொன்மலை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து பரதனை கைது செய்தனா். தப்பியோடி ராஜேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.