சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வமணி (22). அப்பகுதியில், விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு செல்வமணி பாலியல் தொந்தரவு அளித்துளாா். இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளாா். இதில், அதிா்ச்சியடைந்த பெற்றோா் கோட்டை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து செல்வமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.