திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் ஏற்கெனவே 7 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், கரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 3 போ் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். உணவகம் ஒன்றில் பணியாற்றும் அவா்கள் 3 பேரும் வடமாநிலத்துக்குச் சென்று திரும்பிய பிறகு சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.